தீரா மொழி
# நாம் பேச நினைப்பதெல்லாம்...
நான் நினைப்பதைச் சொல்லவும், நீங்கள் நினைப்பதைச் சொல்லவும், நமக்கு ஒரு மொழி தேவைப்படுகிறது.
அதுவே, எழுதவும் படிக்கவும் நம்முடன் இணைந்து பயணிக்கிறது.
உலக வாழ்க்கைப் பயணத்தில் நம்முடன் பயணம் செய்யும் மொழிதான் நமது ஆதார சுருதியும், தீராத இருப்பும், திசைகாட்டும் வழிகாட்டியுமாக நம் வழியில் உடன் வருகிறது.
தீராத மொழியுடன் நமது உறவு, உயிரிலும் கலந்து சுவாசமாக இழைந்துகொண்டிருக்கிறது.
நாம் பேச நினைப்பதையும், ஏற்கெனவே நம்மவர்களால் பேசப்பட்டதையும், எழுதப்பட்டதையும், மொழியின் வரிவடிங்களாக நாம் பார்த்துப் படித்து,
மகிழ்ச்சியும், துயரமும், மௌனமும் நம்முள் பெருகுவதை, தனது பக்கங்களில், தீரா மொழி இக்காலத்தின் அவசியமாகவும், ஆவணமாகவும் பதிவு செய்கிறது.
- ஆர்.வி.ஆர். @ ஆர்.வி.ராஜேந்திரன்.
Comments
Post a Comment